வியாழன், ஜனவரி 26, 2012

கலகலத்துப் போனது ஹசாரேயின் கூடாரம்.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

எதிர் பார்த்த அளவுக்கு மும்பையில் ஹஸாரேயின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு கூட்டம் கூட வில்லை முதல் நாள் வெறும் 40 பேர் மட்டுமே வந்திருந்ததாக மும்பை பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன அடுத்த நாள் மும்பை முழுவதும் அழைப்பு விடுத்து சுமார் ஆயிரம் பேரை மட்டுமே திரட்ட முடிந்தது.  

இதைப்பார்த்து அதிர்ந்துப் போன ஹஸாரே குழுவினர் ஹஸாரேயின் உடல் நிலையைக் காரணம் காட்டி அன்றே உண்;ணாவிரதத்தை முடித்துக்கொண்டு அதற்கடுத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறை நிரப்பும் போராட்டத்தையும் ரத்து செய்வதாக அறிவித்து விட்டனர்.

உயர் இரத்த அழுத்தத்தினால் நிறுநீரகம் செயலிழந்திருப்பதாக மும்பை கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பே டாக்டர்கள் கூறி விட்டனர் அதனால் கூட்டத்தைப் பாதியில் நிருத்தியதற்கு அது காரணமல்ல.

ஹஸாரே குழுவினரின் இணையதளத்தில் மும்பை கூட்டத்தில் பங்கு கொல்வதாக வாக்களித்தவர்களின் எண்ணிக்கை சுமார் இரண்டு லட்சத்தைத் தாண்டி இருந்ததாம் இதை வைத்தே மூன்று நாள் உண்ணாவிரதம் நடத்தி முடித்து விட்டு அதற்கடுத்து அவர்களைக் கொண்டே சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.

கூட்டம் வராததைக் கண்டு இணைய தளத்தில் பதிந்திருந்த ஒவ்வொருவரின் முகவரியை சோதித்த பொழுது ஒரே நபர் மீண்டும், மீண்டும் பலமுறை பதிந்திருப்பது கண்டு பெருத்த ஏமாற்றமடைந்துள்ளனர் இதில் ஒரு நபர் நூறு முறை பதிந்திருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது இவ்வாறு ஹஸாரே குழுவினரின் காதில் பூச்சுற்றியதுக் கண்டு நொந்து போன அண்ணா இனிமேல் இந்த ஆட்டத்தில் நான் இல்லை என்னை விட்டு விடுங்கள் என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டாராம். ( இவர் மட்டும் மக்களை ஏமாற்றலாம் மக்கள் ஒரு நாள் இவரை ஏமாற்றக் கூடாதா ? ) 

சோனியா காந்தி பெயரையும், ராகுல் காந்தி பெயரையும் சொல்லி சங்பரிவாரத்தினரால் வயதான காலத்தில் கொம்பு சீவி களத்தில் இறக்கி விட்டப்பட்டவர் தான் அண்ணா ஹஸாரே என்பதால் மீண்டும் சோனியா காந்தி, ராகுல் காந்தி பெயரைச் சொல்லி ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் அவர்களின் காங்கிரஸை தோற்கடிப்பதற்காக மட்டுமாவது நீங்கள் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றுக் கூறி ஒரு வழியாக அடம் பிடித்த அண்ணாவை சரி கட்டி ஒப்புதல் பெற்று விட்டதாக ஊழல் மன்னன் கெஜ்ரிவால் அறிவித்திருக்கிறார். (இதற்கு மட்டும் உடல் நிலை ஒத்து வந்து விடுமா என்று பொதுவான மக்கள் கேட்கின்றனர் ?)

இதை விட கொடுமை என்னவென்றால் மும்பையில் வெறிச்சோடிப் போயிருந்த உண்ணாவிரத திடலைக்கண்டு கொதித்துப் போன அண்ணா ஒரு கட்டத்தில் மக்களை நோக்கி பொதுப்பணியில் ஈடுபடுவதற்காகவே இதுவரை நான் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறேன் வலிமையான லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதற்காக உங்களை ஒரு மூன்று நாளைக்கு அழைத்தால் வர மறுக்கின்றீர்களே என்று பக்கத்தில் கெஜ்ரிவாலையும் கிரன்;பேடியையும் வைத்துக்கொண்டு கூறி விட்டார். லோக்பால் மசோதாவின் முக்கிய அம்சமே ஊழல் குறித்தது தான் என்பதால் கெஜ்ரிவால், கிரண்பேடி ஊழல் பேர்வழிகள் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

பொதுப்பணியில் ஈடுபடுவதற்காகத் தான் திருமணம் செய்யவில்லை என்பதை மும்பையில் கூறலாமா ? மும்பையை உள்ளங்iகையில் வைத்து உருட்டிக்கொண்டிருக்கும் தாக்கரே வகையறாக்கள் திருமணம் செய்து கொண்டவர்கள் தான் இந்தியாவை கூறு போட்ட அவர்களது சங்பரிவார முன்னால் தலைவர்களில் பலர் திருமணம் செய்து கொண்டவர்கள் தான் திருமணம் செய்து கொள்வது பொதுப்பணி செய்வதற்கு தடை இல்லை என்பதை அறிந்த மும்பை மக்களை இதைக் கேட்டு அழுவதா ? சிரிப்பதா ? என்ற தடுமாற்றத்தில் தள்;ளி விட்டாராம் கோமாளி ஹஸாரே.  



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக